நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அத்தியாவசிய பொருட்களுக்கான மானிய கட்டுபாடுகளை அரசு முழுமையாக ஆராய வேண்டும்: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

அத்தியாவசிய பொருட்களுக்கான மானிய கட்டுபாடுகளை அரசாங்கம் முழுமையாக ஆராய வேண்டும்.

சிரம்பான் தொகுதி பெர்சத்து தலைவர் டத்தோ வி. சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.

பி40 மக்களின் நலனை அடிப்படையாக கொண்டு அரசாங்கம் அத்தியாவசிப் பொருட்களுக்கான மானிய கட்டுப்பட்டை அமல்படுத்தி வருகிறது.

இது நல்ல திட்டம் தான். ஆனால் இந்த கட்டுப்பாடுகள் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது.

முட்டை முதல் தற்போது எரிவாயு தோம்புகள் வரை இப்பிரச்சினை நீண்டுக் கொண்டிருக்கிறது.

விரைவில் ரோன் 95 பெட்ரோலுக்கான மானியமும் அகற்றப்படும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.

பெட்ரோல் என்பது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிப் பொருளாகும்.

ஆக இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்கும் போது அரசாங்கம் முழுமையாக ஆராய்ந்து அமல்படுத்த வேண்டும்.

இல்லையென்றால் இது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset