நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அனைத்து 99 ஸ்பீட் மார்ட் கிளைகளும் காலை 9 மணிக்குத் திறக்கப்படும்: ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது

கோலாலம்பூர்:

நாட்டில் உள்ள அனைத்து 99 ஸ்பீட் மார்ட் கிளைகளும் காலை 9 மணிக்குத் திறக்கப்படும்.

ஜூலை 1 முதல் இது அமலுக்கு வரும் என்று 99 ஹோல்டிங்ஸின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான லீ தியாம் வா இதனை கூறினார்.

மலேசியாவின் மிகப்பெரிய மினி மார்க்கெட் சங்கிலி நிறுவனமாக 99 ஸ்பீட் மார்ட் விளங்குகிறது.

இன்று அந்நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பல விவகாரங்கள் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

குறிப்பாக  நாடு முழுவதும் உள்ள 99 ஸ்பீட் மார்ட் கிளைகளும் காலை 9 மணிக்கு திறக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கை, வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்துவதற்கும் வாங்கும் முறைகளுக்கு ஏற்ப அமைப்பதற்கும் அதன் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப உள்ளது

மேலும் பங்குதாரர்களின் தொடர்ச்சியான நம்பிக்கை, ஆதரவுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

குறிப்பாக 2024 இல் வெற்றிகரமாக பட்டியலிடப்பட்ட பிறகு இது எங்கள் முதல் ஆண்டு பொதுக் கூட்டம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset