நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய இளைஞர்களின் வேலையில்லாப் பிரச்சினைக்கு மிசி 2.0 திட்டம் தீர்வு காணும்: மனிதவள அமைச்சு நம்பிக்கை

கோலாலம்பூர்:

இந்திய இளைஞர்களின் வேலையில்லாப் பிரச்சினைக்கு மிசி 2.0 திட்டம் தீர்வு காணும் என மனிதவள அமைச்சு நம்பிக்கை கொண்டுள்ளது.

மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்மின் சிறப்பு அதிகாரி டிக்கம் லூர்ட்ஸ் இதனை தெரிவித்தார்.

மனிதவள அமைச்சு மிசி எனப்படும் மலேசிய இந்திய திறன் பயிற்சி திட்டத்தை அறிமுகம் செய்தது.

அமைச்சின் கீழ் இயக்கும் எச்ஆர்டி கோர்ப், மித்ரா ஆகியவற்றின் ஆதரவுடன் இத் திட்டம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மிசி 1.0 திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 150 பயிற்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டனர். 8,000த்திற்கும் மேற்பட்டோர் இத் திட்டத்தின் கீழ் பயன் பெற்றனர்.

இந்த் வெற்றியை தொடர்ந்து மிசி 2.0 திட்டத்தை மனிதவள அமைச்சு அறிமுகம் செய்யவுள்ளது.

இம் முறை பயிற்சித் திட்டம் வேலை வாய்ப்புடன் வழங்கப்படவுள்ளது.

இதன் மூலம் இந்திய இளைஞர்களிடையே நிலவும் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை அமைச்சுக்கு உள்ளது.

ஆகவே இந்திய இளைஞர்கள் வாய்ப்புகள் இல்லையென்று வருத்தப்படாமல் இதுபோன்ற வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என டெக்கம் வலியுறுத்தினார்.

முன்னதாக மிசி திட்டத்தின் கீழ்  இன்று இரண்டு பயிற்சித் திட்டங்களை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி.

உறைந்த உணவு உற்பத்தி, தொழில் நுட்பங்கள், திறன்கள், தொழில்முனைவோர் முதல் பயிற்சி திட்டத்தில் அங்கம் வகிக்கிறது.

தொழில் முனைவோருக்கான உணவுப் பாதுகாப்பு,  பேக்கேஜிங் பட்டறை இரண்டாவது பயிற்சி திட்டத்தில் இடம் பெறுகிறது.

இன்று செராஸில் நடைபெற்ற மிசியின் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டவர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட 75 பேர் இப்பயிற்சியில் கலந்து பயன் பெற்றனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset