நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2020 முதல் மோசடி விசாரணைகளின் வாயிலாக சொக்சோவின் 49 மில்லியன் ரிங்கிட் பாதுகாக்கப்பட்டது: ஸ்டீவன் சிம்

புத்ராஜெயா:

கடந்த 2020 முதல் மோசடி விசாரணைகளின் வாயிலாக சொக்சோவின் 49 மில்லியன் ரிங்கிட் பாதுகாக்கப்பட்டது.

மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை கூறினார்.

சொக்சோ எனப்படும்  சமூகப் பாதுகாப்பு அமைப்பு மோசடி வழக்குகள் தொடர்பாக தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த விசாரணைகளின் விளைவாக 2020ம் ஆண்டு முதல் சமூகப் பாதுகாப்பு நிதியில் மொத்தம் 49 மில்லியன் வெற்றிகரமாக சேமிக்கப்பட்டுள்ளது.

அந்தக் காலகட்டத்திலிருந்து இந்த ஆண்டு ஏப்ரல் வரை, தற்காலிக ஊனமுற்றோர் சலுகைத் திட்டம், நிரந்தர ஊனமுற்றோர் சலுகைத் திட்டம், சுகாதாரப் பரிசோதனைத் திட்டம் உள்ளிட்ட மோசடி கூறுகள் சம்பந்தப்பட்ட 679 வழக்குகள் தீவிரமாக விசாரிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

விசாரணைகளின் விளைவாக இந்த வெற்றி அடையப்பட்டது. இதன் விளைவாக 383 வழக்குகள் அல்லது விசாரிக்கப்பட்ட மொத்தத்தில் 56.5 சதவீதம் இடைநிறுத்தப்பட்டன.

இது கடுமையான நிர்வாகம், மேலாண்மை அமைப்பின் செயல்திறனில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பிரதிபலிக்கிறது.

அமெரிக்க சுதந்திர மருத்துவ பரிசோதகர் வாரியத்துடன் இணைந்து சொக்சோ ஏற்பாடு செய்த சமூகப் பாதுகாப்பு,  காப்பீட்டு உரிமைகோரல்களில் மோசடி, ஏய்ப்பு குறித்த கருத்தரங்கின் தொடக்க விழாவில் சிறப்புரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset