நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால் விரைவுப் பேருந்து கால்வாயில் கவிழ்ந்தது:  3 பேர் காயம்

ஈப்போ:

ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால் விரைவுப் பேருந்து கால்வாயிலில் கவிழ்ந்த சம்பவத்தில் 3 பேர் காயமடைந்தனர்.

தாப்பா மாவட் ட போலிஸ்படைத் தலைவர் ஜொஹாரி யஹ்யா இதனை தெரிவித்தார்.

25 பயணிகளை ஏற்றிச் சென்ற விரைவுப் பேருந்து வடக்கு - தெற்கு எக்ஸ்பிரஸ்வேயின் கிலோமீட்டர் 342.2 இல் உள்ள காலவாயிலில் கவிழ்ந்தது.

பினாங்கிலிருந்து கோலாலம்பூரில் உள்ள திபிஎஸ் முனையத்திற்கு பேருந்து சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.

பேருந்து ஓட்டுநரின் தூக்க கலக்கத்தின் காரணமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததது.

இதனை  தொடர்ந்து விரைவுப் பேருந்து கால்வாயிலில் கவிழ்ந்தது.

இதைத் தொடர்ந்து 31 வயது ஓட்டுநர்,  25 பேருந்து பயணிகள் பொதுமக்களின் உதவியுடன் பேருந்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

மூன்று பேர் லேசான காயங்களுக்கு இலக்கானார்கள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset