நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சொந்த பணத்தில் அம்னோ தலைவர்கள் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டனர்: மெகாட்

கோலாலம்பூர்:

சொந்த பணத்தின் அம்னோ தலைவர்கள் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டனர்.

துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான டத்தோஶ்ரீ ஜாஹிட்டின்  அரசியல் செயலாளர் மெகாட் சுல்கர்னாய்ன் இதனை கூறினார்.

அதிகாரப்ப்பூர்வ பயணம் மேற்கொண்டு டத்தோஶ்ரீ ஜாஹித் ஹமிடி இங்கிலாந்துக்கு சென்றுள்ளார்.

அவருடன் அம்னோ தலைவர்களும் இங்கிலாந்துக்கு சென்றனர். அரசாங்கப் பணத்தை பயன்படுத்தி அவர்கள் அங்கு சென்றுள்ளனர் என்ற சர்ச்சைகள் எழுந்துள்ளது..

உண்மையில் இப்பயணத்தில் இணைந்த அம்னோ தலைவர்கள் தங்கள் சொந்தப் பணத்தைப் பயன்படுத்தினர்.

ஜாஹிட்டின் அதிகாரிகளைத் தவிர, மற்றவர்கள் தங்கள் சொந்தப் பணத்தில் பணம் செலுத்தினர்.

அவர்கள் பிரதமர் துறையிலிருந்தோ அல்லது கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்திலிருந்தோ எந்தச் செலவுகளையும் பெறவில்லை என்று மெகாட் மலேசியாகினியிடம் கூறினார்.

கட்சித் தலைவருடன் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட அம்னோ தலைவர்களில் சிலர் விடுமுறையில் அந்நாட்டில் இருந்ததாக அவர் மேலும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset