
செய்திகள் மலேசியா
காலியாகி இருக்கும் அமைச்சர் பதவிகளை நிரப்ப டத்தோஶ்ரீ அமிருடின், டத்தோஶ்ரீ ரமணன் தகுதியானவர்கள்
கோலாலம்பூர்:
காலியாகி இருக்கும் அமைச்சர் பதவிகளை நிரப்ப டத்தோஶ்ரீ அமிருடின், டத்தோஶ்ரீ ரமணன் தகுதியானவர்களாக கருதப்படுகின்றனர்.
கெஅடிலான் தேர்தலில் தோல்வி கண்டதை தொடர்ந்து ரபிசி ரம்லி, நிக் நஸ்மி ஆகியோர் தங்களின் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
இந்நிலையில் காலியாக இருக்கும் அந்த அமைச்சர் பதவிகளை நிரப்ப தகுதியானர்கள் நிரப்ப வேண்டும்.
குறிப்பாக அரசாங்க நிர்வாகத்தை வலுப்படுத்துவதில் அவர்களின் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது.
அதன் அடிப்படையில் கெஅடிலான் உதவித் தலைவர்களான டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி, டத்தோஶ்ரீ ரமணன் அமைச்சர்களாக நியமிக்கப்படுவதை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்.
இரு தலைவர்களும் இப்போது உதவித் தலைவராக கெஅடிலானில் உயர்ந்த தலைமைப் பதவியில் உள்ளனர்.
மேலும் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி சிலாங்கூர் மாநில மந்திரி புசாராக மிக சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார். அம்மாநிலத்தின் மேம்பாட்டிற்கும் மக்களின் நல்வாழ்வுக்கும் அவர் சேவை அளப்பரியதாக உள்ளது.
ஆக அவரின் இந்த ஆற்றல் ஒற்றுமை அரசுக்கு பெரும் பயனாக இருக்கும்.
இந்நிலையில் ஒற்றுமை அரசாங்கத்தில் இந்திய சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் இனி இல்லை என்பது மிகப் பெரிய குறையாக உள்ளது.
கெஅடிலான் ஆட்சிக்கு வருவதற்கு இந்திய சமுதாயத்தின் ஆதரவு பெரும் உறுதுணையாக இருந்தது. ஆனால் இந்த முழு அமைச்சர் விவகாரம் தொடர்ந்து சர்ச்சையாக உள்ளது.
மித்ரா சிறப்பு நடவடிக்கை குழுத் தலைவராகவும் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சராகவும் டத்தோஶ்ரீ ரமணன் மிக சிறப்பாக சேவையை வழங்கியுள்ளார்.
குறிப்பாக குறுகிய காலத்தில் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கான பல திட்டங்களை டத்தோஶ்ரீ ரமணன் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இவ்வேளையில் முழு அமைச்சராக நியமிக்கப்படும் போது அவர் இந்திய சமுதாயத்தில் குரலாக தொடர்ந்து விளங்குவார்.
இக்காரணங்களில் அடிப்படையில் காலியாகி இருக்கும் அமைச்சர் பதவிகளை நிரப்ப டத்தோஶ்ரீ அமிருடின், டத்தோஶ்ரீ ரமணன் தகுதியானவர்கள் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 5, 2025, 10:35 pm
மடானி அமைச்சரவையில் இணைய விருப்பமில்லை: கைரி
June 5, 2025, 10:34 pm
காணாமல் போன இங்கிலாந்து ஆடவரின் உடல் மின்தூக்கிச் சுரங்கத்தில் கண்டுபிடிப்பு
June 5, 2025, 10:28 pm
10 சதவீதம் பணியாளர்களைக் குறைக்க பெட்ரோனாஸ் நிறுவனம் முடிவு
June 5, 2025, 10:27 pm
இல்ஹாம் கோபுரத்தை எம்ஏசிசி கைப்பற்றியதை எதிர்த்து வழக்கு தொடர துன் டாயிம் மனைவி உத்தரவு
June 5, 2025, 10:07 pm
அரசாங்க நிலத்தில் அனுமதியின்றி ஆலயங்கள் கட்ட முடியாது: சிவநேசன் எச்சரிக்கை
June 5, 2025, 5:51 pm