நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுல்தான் ஹஸ்னால் போல்கியா ஆரோக்கியமாக உள்ளார்: பிரதமர்

கோலாலம்பூர்:

புருணை சுல்தான் ஹஸ்னால் போல்கியா ஆரோக்கியமான நிலையில் உள்ளார்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

கடந்த சனிக்கிழமை ஐஜேஎன்னில்  இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு அவரது மீட்பு செயல்முறை சீராக நடந்து வருகிறது.

புரூணை சுல்தான் நேற்று மாலை பண்டார் ஶ்ரீ பகவானுக்கு புறப்பட்டு சென்றார்.

அதற்கு முன் சுல்தான் ஹஸ்னாலை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவரின் உடல் நிலை மிகவும் சிறப்பாக உள்ளது.

முழுமையாக அவர் குணமடைய துவா செய்து கொள்கிறேன் என்று டத்தோஶ்ரீ அன்வார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset