நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோ வீ.பி. சண்முகம் புட்சால் போட்டி: சிம்பாங் பிரதஸ் அணி வெற்றி

மலாக்கா

மலாக்கா மாநில மஇகா இளைஞர் பிரிவு ஏற்பாட்டில் டத்தோ வீ.பி. சண்முகம் புட்சால் கால்பந்து போட்டி சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடந்து முடிந்தது. 

ஜூன் 3ஆம் தேதி இரவு 8.00 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டி, ஜூன் 4ஆம் தேதி அதிகாலை 2.00 மணியளவில் நிறைவுபெற்றது.

மலாக்கா மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் குகன் ராம் தலைமையில் நடத்தப்பட்ட இந்த போட்டி இளைஞர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக அமைந்தது. இப்போட்டியில் 14 அணிகள் பங்கேற்றதோடு, விளையாட்டாளர் மிகச் சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார்கள்.

ஒற்றுமையை நிலைநாட்டிய போட்டி

இதனிடையே இப்போட்டியை டத்தோ வீ.பி. சண்முகம்,  மஇகா  விளையாட்டு பிரிவு தலைவர் ஆண்ட்ரூ டேவிட் ஆகியோர் இணைந்து தொடக்கி வைத்தனர் வைத்தனர்.

இப்போட்டியை வெற்றிகரமாக நடத்த உதவிய மலாக்கா மாநில மஇகா இளைஞர் விளையாட்டு பிரிவு தலைவர் என். புனிதன் மற்றும் அவரது குழுவினருக்கு மாநில மஇகா சார்பில் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

இப்போட்டியின் வெற்றியாளர் கிண்ணத்தை சிம்பாங் பிரதஸ் எப்சி வென்ற நிலையில் இரண்டாம் இடத்தை ஜிஎம்பி அணி வென்றது. 3ஆம் நிலையை கெடோங் எப்சி பிடித்தது.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset