நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் AWAS வேகக் கட்டுப்பாடு கண்காணிப்பு கேமராக்கள் இன்னும் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை: போக்குவரத்து அமைச்சகம்

கோலாலம்பூர்:

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் AWAS வேகக் கட்டுப்பாடு கண்காணிப்பு கேமராக்கள் இன்னும் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்று போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்தது. 

முன்னதாக, ஜூன் மாதம் கேமராக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சோதனைக்கான புதிய தேதி அறிவிக்கப்படும் என்றும் போக்குவரத்து அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டது. 

மார்ச் மாதத்தில், போக்குவரத்து அமைச்சகத்தின் பொதுச் செயலாளர் ஜனசந்திரன் முனியன், AWAS சோதனைகள் ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று கூறினார்.

மலேசியா முழுவதும் புதிய AWAS கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், சோதனைகள் இரண்டு இடங்களில் மட்டுமே சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும், 

முதலாவது கேஎல் - காரக் விரைவுச்சாலையிலும் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் உள்ள செனாவாங் மற்றும் சிம்பாங் ஆம்பாட் டோல் பிளாசா இடையேயான பாதையிலும் கேமராக்கள் பொருத்தப்படும். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset