நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எல்ஆர்டி தண்டவாளத்தில் விழுந்த தைவான் நபர் மரணம்

பூச்சோங்:

எல்ஆர்டி தண்டவாளத்தில் தவறி  விழுந்த தைவான் நபர் மரணமடைந்தார்.

சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ்மொக்தார் இதனை கூறினார்.

நேற்று  மாலை பண்டார்  பூச்சோங் எல்ஆர்டி ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்புத் துறைக்கு மாலை 6.05 மணிக்கு அவசர அழைப்பு வந்தது.

உடனே  சுபாங் ஜெயா தீயணைப்பு, மீட்பு நிலையத்தைச் சேர்ந்த பணியாளர்கள் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

சம்பவ இடத்தில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் மயக்கமடைந்த நிலையில் இருந்தார். அவர் இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. 

பாதிக்கப்பட்டவரை மீட்கும் நடவடிக்கையில் ஏழு பணியாளர்கள், ஒரு தீயணைப்பு மீட்புப் பணியாளர் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset