
செய்திகள் மலேசியா
நெடுஞ்சாலை நிதியில் மோசடி: 143 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்களை எம்ஏசிசி கைப்பற்றியது
புத்ராஜெயா:
நெடுஞ்சாலை நிதியில் மோசடி தொடர்பில் கிட்டத்தட்ட 143 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்களை எம்ஏசிசி கைப்பற்றியுள்ளது.
கிள்ளான் பள்ளத்தாக்கில் டான்ஸ்ரீ அந்தஸ்து கொண்ட ஒரு முக்கிய நபரை உள்ளடக்கிய நெடுஞ்சாலை கட்டுமானத்திற்காக சுகுக் மோசடி தொடர்பான விசாரணையில் எம்ஏசிசி பறிமுதல் செய்யப்பட்ட பல சொத்துக்களை பட்டியலிட்டுள்ளது.
அது பின்வருமாறு:
* பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகை தோராயமாக 143 மில்லியன் ரிங்கிட்டாகும்.
* மொத்தம் 4.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 14 தனிப்பட்ட கணக்குகள்
* மொத்தம் 33 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள எட்டு நிறுவன கணக்குகள்
* ஆடம்பரமான காண்டோமினியங்கள், 24.5 ரிங்கிட் மில்லியன் மதிப்புள்ள ஒரு நிலம்
* மொத்தம் 7.65 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஒன்பது கார்கள்
* 13 கார்கள் இன்னும் விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கப்படவில்லை
* சுமார் 25 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஆடம்பர கைக்கடிகாரங்கள்
* 3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கைப்பைகள்
* 6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நகைகள் மற்றும் வைரங்கள்
* 400,000 ரிங்கிட் மதிப்புள்ள நான்கு குதிரைகள்
* 3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மதுபானங்கள்
* 15 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு சொத்துக்கள்
* சூதாட்ட நடவடிக்கைகள் தோராயமாக 20 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் 2016, 2020 க்கு இடையில் நடந்ததாக ஆரம்ப விசாரணைகள் கண்டறிந்துள்ளன என்று எம்ஏசிசி தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி கூறினார்.
இந்த மோசடியில் சுமார் 1.35 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள அங்கீகரிக்கப்பட்ட சுகுக் நிதிகள், சுமார் 360 மில்லியன் ரிங்கிட், 416 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள தவறான கூற்றுக்கள், 50 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பிற வங்கி வசதி கடன்கள் ஆகியவை அடங்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 5, 2025, 10:35 pm
மடானி அமைச்சரவையில் இணைய விருப்பமில்லை: கைரி
June 5, 2025, 10:34 pm
காணாமல் போன இங்கிலாந்து ஆடவரின் உடல் மின்தூக்கிச் சுரங்கத்தில் கண்டுபிடிப்பு
June 5, 2025, 10:28 pm
10 சதவீதம் பணியாளர்களைக் குறைக்க பெட்ரோனாஸ் நிறுவனம் முடிவு
June 5, 2025, 10:27 pm
இல்ஹாம் கோபுரத்தை எம்ஏசிசி கைப்பற்றியதை எதிர்த்து வழக்கு தொடர துன் டாயிம் மனைவி உத்தரவு
June 5, 2025, 10:07 pm
அரசாங்க நிலத்தில் அனுமதியின்றி ஆலயங்கள் கட்ட முடியாது: சிவநேசன் எச்சரிக்கை
June 5, 2025, 5:51 pm