நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நிதி முறைகேடுகளை நிவர்த்தி செய்ய சிறப்பு பணிக்குழு அமைக்கப்படும்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

நாட்டின் நிதி நிர்வாகத்தின் நம்பகத்தன்மையை வலுப்படுத்தவும் கடுமையான நிதி முறைகேடுகளை நிவர்த்தி செய்யவும் அரசாங்கம் ஒரு சிறப்பு பணிக்குழுவை அமைக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நேற்று முன்னதாக அவர் தலைமை தாங்கிய சிறப்பு அமைச்சரவைக் குழு (JKKTN) கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்தார்.

நிதி முறைகேடுகள் நாட்டின் தி நிர்வாகத்தின் நம்பகத்தன்மையை பாதிக்கக்கூடும்.

இச்சிக்கலைக் களைய அரசு இந்தச் சிறப்பு பணிக்குழுவை நியமிக்கும் என்றார் அவர்.

1957 ஆம் ஆண்டு தணிக்கைச் சட்டத்தில் திருத்தங்கள் மூலம் தேசிய தணிக்கைத் துறையின் பங்கை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு இணங்க, கடுமையான நிதி முறைகேடுகளை நிவர்த்தி செய்ய JKKTN ஒரு சிறப்பு பணிக்குழுவை நிறுவ ஒப்புக்கொண்டது என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset