நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த 279 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்

சிப்பாங்:

நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த 279 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்.

மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு நிறுவனம் இதனை கூறினார்.

இந்தியா,  வங்காளதேசம், பாகிஸ்தானைச் சேர்ந்த அவர்கள் நேற்று கேஎல்ஐஏ விமான நிலையம் வழியாக நுழைவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் நாட்டிற்குள் நுழைய முயன்றனர்.

இதனை அவர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டில் கேஎல்ஐஏவில் கண்காணிப்புக் குழு நிறுவப்பட்டதிலிருந்து  தடுத்து வைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவே அதிகபட்ச தினசரி பதிவாகும்.

வெளிநாட்டினரின் சட்டவிரோத நுழைவு போக்கு அதிகரித்து வருகிறது.

குறிப்பாக மலேசியாவில் உச்ச வருகை நேரங்கள், பொது விடுமுறை காலங்களில் இது அதிகம் நடக்கிறது.

நாடுகடத்தல் நடவடிக்கைகள் எல்லைப் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

இதனால் உண்மையிலேயே தகுதியுள்ள, அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் நபர்கள் மட்டுமே நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதை உறுதி செய்கிறது என மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு நிறுவனம் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset