நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

17ஆவது மாநில தேர்தலுக்கு பின் ஜிஆர்எஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுவது குறித்து அம்னோ பரிசீலிக்கும்: பூங் மொக்தார்

கோத்தா கினபாலு:

17ஆவது சபா மாநில தேர்தலுக்கு பின் ஜிஆர்எஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுவது குறித்து அம்னோ பரிசீலிக்கும்.

சபா அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ பூங் மொக்தார் ராடின் இதனை கூறினார்.

ஜிஆர்எஸ் கட்சியுடன் அம்னோ முன்பு இருண்ட வரலாற்றை கொண்டுள்ளது.

அதனால் கூட்டணியுடனான எந்தவொரு கூட்டுறவையும் கவனமாக மதிப்பிட வேண்டியிருந்தது.

இது மீண்டும் துரோகம் செய்யப்படுவதைத் தவிர்க்க,

17ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் போது, ​​குறிப்பாக ஜிஆர்எஸ் கட்சியுடன் அரசியல் கூட்டுறவை உருவாக்குவதில் சபா அம்னோ மிகவும் எச்சரிக்கையாக உள்ளது.

சபா அம்னோ ஜிஆர்எஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட மறுக்கவில்லை.

ஆனால் அக்கட்சியுடன் கசப்பான வரலாற்றை நாங்கள் கடந்து வந்துள்ளோம். இதையும் எங்களால் மறக்க முடியாது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset