
செய்திகள் மலேசியா
பிரதமர் அன்வார் முன் வைத்த 8 கேள்விகள் தொடர்பிலான மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது
கோலாலம்பூர்:
நடப்பில் இருக்கும் பிரதமருக்கான சட்ட பாதுகாப்பு குறித்து, கூட்டரசு நீதிமன்றத்திடம் , அரசமைப்பு சட்டம் தொடர்பாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் முன் வைத்த 8 கேள்விகள் தொடர்பிலான மனுவை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுப்படி செய்தது.
நீதித்துறை நீதிமன்ற சட்டத்தின் 84 வது பிரிவின் கீழ் உள்ள நிபந்தனைகள் அந்த மனு பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி உயர்நீதிமன்ற நீதிபதி ரோஸ்மாவார் ரொசாய்ன் அதனை தள்ளுப்படு செய்தார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் அன்வாரின் முன்னாள் ஆராய்ச்சி அதிகாரி Muhammad Yusoff Rawther அவருக்கு எதிராகத் தாக்கல் செய்த பாலியல் வன்கொடுமை தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு இந்த மனு தொடர்புடையதாகும்.
இந்த வழக்கு விசாரணை ஜூன் 16-ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், அன்வார் விசாரணையைத் தொடரத் தயாராக இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அன்வாரின் வழக்கறிஞர் டத்தோஸ்ரீ ராஜசேகரன் கிருஷ்ணன் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 6, 2025, 5:15 pm
தெற்கு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
June 6, 2025, 4:23 pm
பிகேஆரின் புதிய தலைமைத்துவக் கூட்டம் இம்மாதம் நடைபெறும்: ஃபுசியா சாலே
June 6, 2025, 4:08 pm
மலாய்க்காரர்களின் மெகா கூட்டணி பிரிவினைக்கு அல்ல; நிலைத்தன்மைக்கான முயற்சி: புனிதன்
June 6, 2025, 3:20 pm
தியாகப் பெருநாள் : பெரும்பாலான மாநிலங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 6, 2025, 3:10 pm