நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமர் அன்வார் முன் வைத்த 8 கேள்விகள் தொடர்பிலான மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது

கோலாலம்பூர்:

நடப்பில் இருக்கும் பிரதமருக்கான சட்ட பாதுகாப்பு குறித்து,  கூட்டரசு நீதிமன்றத்திடம் , அரசமைப்பு சட்டம் தொடர்பாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் முன் வைத்த 8 கேள்விகள் தொடர்பிலான மனுவை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுப்படி செய்தது.

நீதித்துறை நீதிமன்ற சட்டத்தின் 84 வது பிரிவின் கீழ் உள்ள நிபந்தனைகள் அந்த மனு பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி உயர்நீதிமன்ற நீதிபதி ரோஸ்மாவார் ரொசாய்ன் அதனை தள்ளுப்படு செய்தார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் அன்வாரின் முன்னாள் ஆராய்ச்சி அதிகாரி  Muhammad Yusoff Rawther அவருக்கு எதிராகத் தாக்கல் செய்த பாலியல் வன்கொடுமை தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு இந்த மனு தொடர்புடையதாகும்.

இந்த வழக்கு விசாரணை ஜூன் 16-ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், அன்வார் விசாரணையைத் தொடரத் தயாராக இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அன்வாரின் வழக்கறிஞர் டத்தோஸ்ரீ ராஜசேகரன் கிருஷ்ணன் கூறினார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset