நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேச நிந்தனை  சட்ட விவகாரத்தை பரிந்துரைக்கக் கோரிய மொஹைதினின் மனு ஆகஸ்ட் 28ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது

கோலாலம்பூர்:

தேச நிந்தனை சட்டத்தின் கீழ் சில விதிகளின் செல்லுபடித்தன்மை குறித்த சட்டக் கேள்வியை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பக் கோரிய டான்ஶ்ரீ மொகைதினின் மனுவை ஆகஸ்ட் 28ஆம் தேதி உயர் நீதிமன்றம் விசாரிக்கும்.

கடந்த ஆண்டு கிளந்தான், குவா மூசாங்கில் நடந்த நெங்கிரி இடைத்தேர்தலின் போது முன்னாள் பிரதமர் தேச நிந்தனை அறிக்கைகளை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மொஹைதின்  சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோசுவா டே, பாதுகாப்பு,  வழக்குத் தொடுப்பு தேதி குறித்து ஒப்புக்கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து நீதிபதி ஜமீல் ஹுசின் இந்த  தேதியை நிர்ணயித்தார்.

மேலும் ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் அரசு தரப்பு, எதிர் தரப்பு தங்கள் வாதங்களை தாக்கல் செய்ய அவர் உத்தரவிட்டார்.

துணை அரசு வழக்கறிஞர் ரசாலி சே அனி, அரசு தரப்புக்கு ஆதரவாக வாதாடினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset