நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எரிவாயு தோம்புகளுக்கான கட்டுப்பாடு உணவுப் பொருட்களின் விலைகளை  உயர்த்தலாம்; அமலாக்கத்தை அரசு ஒத்திவைக்க வேண்டும்: பிரெஸ்மா

கோலாலம்பூர் -

உணவுத் துறைக்கான மானிய விலையிலான எரிவாயு தோம்புகளுக்கான கட்டுப்பாடு உணவுப் பொருட்களின் விலைகளை 40 சதவீதம் வரை உயர்த்தலாம்.

பிரெஸ்மாவின் தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உணவுத் துறைக்கான மானியமில்லாத சமையல் எரிவாயு தோம்புகள் பயன்பாட்டை கடுமையாக்குவதற்கான அரசாங்கத்தின் திட்டம் உணவு தொழில்முனைவோர் மத்தியில் பெரும்  கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அரசாங்கத்தின்  இந்த நடவடிக்கை தொடர்ந்தால் உணவுப் பொருட்களின் விலைகள் கிட்டத்தட்ட  40 சதவீதம் வரை உயரக்கூடும்.

மானிய விலையில் எல்பிஜி எரிவாயு (ஓப்ஸ் கசாக்) பயன்பாடு தொடர்பான அமலாக்க நடவடிக்கைகளை செயல்படுத்துவதை அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 16ஆவது பொதுத் தேர்தல் வரை அத்திட்டத்தை உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு ஒத்திவைக்க வேண்டும்.

இதுவே உள்ளூர் உணவுத் துறையினரின் மிகப் பெரிய கோரிக்கையாக உள்ளது என்று டத்தோ ஜவஹர் அலி கூறினார்.

இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் தற்போது இயக்கச் செலவுகளில் பல்வேறு சவால்களை ஏற்படுத்தும்.

குறிப்பாக  உணவு தொழில்முனைவோர் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

இந்த விவகாரத்தில் எங்களுக்கு ஒன்று புரியவில்லை.

என்னவென்றால் மானிய விலையில் 14 கிலோகிராம் எரிவாயு தோம்புகள் பயன்பாடு வீட்டு உபயோகத்திற்கு மட்டுமே என்பது தொழில்நுட்ப ரீதியாக உண்மை.

ஆனால் பெரும்பாலான உணவகங்கள், பர்கர் விற்பனையாளர்கள், இரவு சந்தைகள் இந்த எரிவாயுவைப் பயன்படுத்துகின்றன.

காரணம் அங்கு விற்கப்படும் உணவுகளின் விலை மிகவும் மலிவானது. இந்த உண்மையை அரசாங்கமும் அமைச்சும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆக இப்பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்க வேண்டும் என்று டத்தோ ஜவஹர் அலி கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset