நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் டாயிம் மனைவியின் 750 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான சொத்துக்களை முடக்க எம்ஏசிசி அனுமதி பெற்றுள்ளது

புத்ராஜெயா:

முன்னாள் அமைச்சர் மறைந்த துன் டாயிம் மனைவியான நைமா அப்துல் காலித்துக்குச் சொந்தமான பல சொத்துக்களை முடக்க எம்ஏசிசி தாக்கல் செய்த மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று ஏற்றுக் கொண்டது.

எம்ஏசிசி நீதிமன்றத்தில் ஒரு தரப்பு விண்ணப்பத்தை தாக்கல் செய்தது.

758 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான  நைமாவின் சொத்துகள், அவரது குடும்பத்தினரின் சொத்துக்கள் முடக்கப்பட்ட ஏழு சொத்துக்கள் இதில் அடங்கும்.

இதில் லண்டனில் உள்ள மூன்று சொகுசு குடியிருப்புகள் அடங்கும். மற்றொன்று அவரின் வங்கிக் கணக்கும் அடங்கும்.

பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதி, சட்டவிரோத நடவடிக்கைகளின் வருமானம் 2001 பிரிவு 4(1) தொடர்பாக துன் டாயிம், நைமா மீது ஏஜென்சி நடத்திய விசாரணையைத் தொடர்ந்து எம்ஏசிசி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset