நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமானா இக்தியாரில் ஏற்கெனவே கடனுதவிப் பெற்றவர்கள் மீண்டும் அதற்கு விண்ணப்பிக்கலாம்: டத்தோஸ்ரீ ரமணன்

சுங்கைபூலோ:

அமானா இக்தியாரில் ஏற்கெனவே கடனுதவிப் பெற்றவர்கள் மீண்டும் அதற்கு விண்ணப்பிக்கலாம்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

அதிகமான இந்திய பெண் வர்த்தகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் அமானா இக்தியாரின் கீழ் பெண் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இத்திட்டம் அறிமுகம் செய்ததில் இருந்து குறுகிய காலத்தில் அதிகமான பெண்கள் பயன் பெற்றனர்.

குறிப்பாக ஒதுப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட்டும் விரைவாக முடிந்து விட்டது.

இந்திய பெண்கள் வியாபாரத்தில் ஆர்வமாக உள்ளனர். மேலும் அவர்களுக்கு இந்த பெண் திட்டம் தேவை என்பதை அமைச்சு புரிந்து கொண்டது.

இது தொடர்பில் அமானா இக்தியார்  தலைமை இயக்குநர் டத்தோ ஷமிர் அஜிஸ்சுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினேன்.

இப்பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இவ்வாண்டு பெண் 2.0 திட்டத்திற்கு கூடுதலாக 50 மில்லியன் என மொத்தம் 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் ஏற்கனவே கடன் பெற்றிருந்தால் மீண்டும் அதற்கு விண்ணப்பிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்தது.

இது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அமானா இக்தியார் அதற்கு ஒப்புதல் வழங்கியது.

ஆக கடனுதவி பெற்றவர்கள் மீண்டும் அதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset