
செய்திகள் மலேசியா
அமைச்சரவை மாற்றம்; பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்: டத்தோஸ்ரீ ரமணன்
சுங்கைபூலோ:
அமைச்சரவை மாற்றம் விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை வலியுறுத்தினார்.
கெஅடிலானைச் சேர்ந்த இரு அமைச்சர்கள் பதவி விலகி விட்டனர்.
அதே போன்று அம்னோவைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் கெடிலானில் இணையவுள்ளார்.
இதனால் அமைச்சரவை மாற்றப்படுமா. புதியவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
குறிப்பாக கெஅடிலான் உதவித் தலைவராக வெற்றி பெற்றதால் நான் அமைச்சராக நியமிக்கப்படவுள்ளேன் என யூகங்கள் வந்துக் கொண்டிருக்கின்றன.
எது எப்படி இருந்தாலும் அமைச்சரவை மாற்றம் என்பது பிரதமரின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டதாகும்.
அதே வேளையில் யாரை அமைச்சராக நியமிக்க வேண்டும். எப்போது நிகமிக்க வேண்டும் என்பது எல்லாம் பிரதமருக்கு தெரியும்.
ஆகையால் இந்த விவகாரத்தில் பிரதமருக்கு யாரும் அழுத்தம் கொடுக்கக் கூடாது.
அமானா இக்தியாரின் பெண் 2.0 திட்டத்தின் 100 மில்லியன் நிதி அறிவிப்பு நிகழ்வுக்கு பின் டத்தோஸ்ரீ ரமணன் செய்தியாளார்களிடம் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்ச்சியில் அமானா இக்தியாரின் தலைமை இயக்குநர் டத்தோ ஷாமிர் அஜிஸ், துணையமைச்சரின் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 4, 2025, 5:50 pm
ஹோட்டலில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் பிரபல நடிகர் கைது
June 4, 2025, 4:56 pm
வறட்சி காலத்தில் சிலாங்கூரில் நீர் விநியோகம் தடைப்படக்கூடாது: டாக்டர் சுரேந்திரன்
June 4, 2025, 4:55 pm
கெஅடிலான் தொகுதி தேர்தலில் வெற்றி பெற்ற நடேசன், ஜோனதன் வேலாவுக்கு சிறப்பு செய்யப்பட்டது
June 4, 2025, 4:41 pm