
செய்திகள் மலேசியா
AIMST பல்கலைக்கழகத்தில் முய்தாய் போட்டி : நாடு முழுவதும் 170 வீரர்கள் கலந்து கொண்டனர்
சுங்கைப்பட்டாணி–
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற “Gurumu Star Combat 2025” முய்தாய் போட்டியில் நாடு முழுவதும் இருந்து வந்த 170க்கும் மேற்பட்ட வீரர்களை கலந்து கொண்டார்கள். இது தற்காப்பு கலை திருவிழாவாக நடந்தது.
இப்போட்டியினை Gurumu MMA Academy மற்றும் MIED-MIC தேசிய விளையாட்டு பிரிவு இணைந்து நடத்தியது. இப்போட்டி மிக சிறப்பாகவும் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதற்கு வழிவகைச் செய்தவர் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக வேந்தரும், மஇகா தலைவருமான தான்ஶ்ரீ விக்னேஸ்வரன் தான் என Andrew David கூறினார்
இந்த பிரமாண்ட போட்டி பலதரப்பட்ட வயதுடைய மற்றும் பல்வேறு இனத்தினர் சேர்ந்த வீரர்களை ஒன்றிணைத்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்திய இளைஞர்களின் ஈடுபாடும் துடிப்பும் சிறப்பாகவே தென்பட்டது என அவர் மேலும் சொன்னார்
முன்னதாக இப்போட்டியை டத்தோ டாக்டர் எஸ். ஆனந்தன் தொடக்கி வைத்தார். இந்த போட்டி மிகப் பெரிய வெற்றி பெற்றதற்கு உறுதுணையாக இருந்த மாநில மஇகா இளைஞர் பிரிவினர், தலைவர்கள், ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக பொறுப்பாளர்கள் அனைவருக்கும் Andrew நன்றி தெரிவித்துக் கொண்டார்.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
June 4, 2025, 5:50 pm
ஹோட்டலில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் பிரபல நடிகர் கைது
June 4, 2025, 4:56 pm
வறட்சி காலத்தில் சிலாங்கூரில் நீர் விநியோகம் தடைப்படக்கூடாது: டாக்டர் சுரேந்திரன்
June 4, 2025, 4:55 pm
கெஅடிலான் தொகுதி தேர்தலில் வெற்றி பெற்ற நடேசன், ஜோனதன் வேலாவுக்கு சிறப்பு செய்யப்பட்டது
June 4, 2025, 4:41 pm