நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வேப் விற்பனையை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் : யுனேஸ்வரன் வலியுறுத்து

செகாமாட்,  

இளைஞர்களின் நலனுக்காக, வேப் (மின் சிகரெட்டை) விற்பனையை முழுமையாகத் தடை செய்ய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யுனேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

2017இல் 13–17 வயதுடைய இளைஞர்களில் 9.8% பேர் வேப்பைப் பயன்படுத்தியிருந்த நிலையில், 2022இல் இதன் எண்ணிக்கை 14.9% ஆக உயர்ந்தது என்பது மிகக் கவலைக்கிடமான தரவாகும். இது, நிகோட்டின் அடிமைத்தன்மையை மேலும் தீவிரமாக்கும் ஒரு வளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

மூளை வளர்ச்சியை பாதிக்கின்றது

வேப்பில் உள்ள நிகோட்டின், குறிப்பாக இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களின் மூளையின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிப்பதாக மருத்துவ ஆய்வுகள் காட்டியுள்ளன. 

நினைவுத்திறன், கவனக்குறைவு, மன அழுத்தம், உடலுறுப்பு பாதிப்பு உள்ளிட்ட பல விளைவுகளை இது ஏற்படுத்தும் எனக் கூறப்படுகின்றது. 

மருத்துவ செலவு RM 150.000

2023 ஜூன் மாதம் வரையில் மட்டும் சுகாதார அமைச்சகம் 17 வேப் தொடர்பான  (EVALI) சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது. EVALI நோயாளி ஒருவருக்கு சிகிச்சையளிக்கச் செலவாகும் தொகை RM150,000 வரை எட்டும் என்பதையும் யுனேஸ்வரன் சுட்டிக் காட்டினார்.

இதையடுத்து, சில மாநிலங்கள் – ஜொகூர், கெடா, திரெங்கானு – வேப் விற்பனை உரிமங்களை புதுப்பிக்காமல் தடை விதித்துள்ளன. இதுபோன்று, மத்திய அரசு நாட்டெங்கும் ஒரே நேரத்தில் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அதிக வரிவசூலை நோக்கமாகக் கொண்டு இளைஞர்களின் ஆரோக்கியத்தை புறக்கணிக்கக் கூடாது. வருங்கால தலைமுறையினருக்காகவே இன்று அரசு சீரான முடிவை எடுக்க வேண்டும் என்று யுனேஸ்வரன் தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset