நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மூத்த வெளியுறவு அதிகாரி ஷாருல் புதிய மலேசியாவுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்ட்டார்

கோலாலம்பூர்: 

வெளியுறவு அமைச்சின் முன்னாள் தலைமை செயலாளர் ஷாருல் இக்ராம் யாகோப் மலேசியாவுக்கான புதிய அமெரிக்கா தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இதற்கு முன் இந்த பதவியில் முன்னாள் அமைச்சர் நஸ்ரி அப்துல் அஸிஸ் பொறுப்பு வகித்து வந்த நிலையில் அவரின் பணி ஒப்பந்தம்  கடந்த பிப்ரவரி மாதம்  நிறைவடைந்தது. 

அவரின் பணி நியமனத்திற்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது. 

கடந்த 34 ஆண்டுகளாக ஷாருல் அரச தந்திர பொது சேவை துறையில் தனது பணியை மேற்கொண்டு வருகிறார். 

இதற்கு முன் அவர் பெய்ஜிங், வாஷிங்டன் ஆகிய அரச தந்திர திட்டங்களில் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset