நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்னோவிலிருந்து விலகிய தெங்கு டத்தோஶ்ரீ ஸப்ருலின் செயல் பொறுப்பற்றதாகும்: சிலாங்கூர் அம்னோ இளைஞர் பிரிவு குற்றச்சாட்டு 

ஷாஆலாம்: 

அம்னோவிலிருந்து கட்சி பதவியை இராஜினாமா செய்து விட்டு பிகேஆர் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ள அமைச்சர் தெங்கு டத்தோஶ்ரீ ஸப்ருல் அப்துல் அஸிஸின் நடவடிக்கை பொறுப்பற்றதாகும், அதேவேளையில் சுயநலமிக்கது என்று சிலாங்கூர் மாநில அம்னோ இளைஞர் பிரிவு குற்றஞ்சாட்டியது. 

ஓர் தலைசிறந்த அரசியல்வாதியின் செயலாக இது பார்க்கப்படவில்லை என்றும் அம்னோவில் இருந்த போதுதான் தெங்கு டத்தோஶ்ரீ ஸப்ருலுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது என்று இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ முஹம்மத் இம்ரான் தம்ரின் கூறினார். 

அம்னோவைச்  சார்ந்த ஏழு அமைச்சர் பதவி, ஐந்து துணை அமைச்சர் பதவிகள் தொடர்ந்து நிலைத்திருக்க செய்ய அம்னோ தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும். 

முன்னதாக, அம்னோவிலிருந்து தாம் விலகுவதாக தெங்கு டத்தோஶ்ரீ ஸப்ருல் அப்துல் அஸிஸ் தனது இராஜினாமா கடிதத்தை வழங்கினார். 

டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பிகேஆர் கட்சியில் இணையப்போவதாக தெங்கு டத்தோஶ்ரீ ஸப்ருல் தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset