நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்காவுக்கு கல்வி பயில திட்டமிடும் மலேசிய மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம்: அமெரிக்க தூதரகம் தகவல் 

கோலாலம்பூர்: 

அமெரிக்காவில் மேற்கல்வியைப் பயில திட்டமிடும் மலேசிய மாணவர்கள் தங்களின் கல்வி விண்ணப்பங்களை முறைப்படி விண்ணப்பம் செய்யலாம் என்று கோலாலம்பூரில் உள்ள அமெரிக்கா தூதரகம் தெரிவித்தது. 

மேற்கல்வி பயில விரும்பும் மாணவர்கள்,  மாற்று பாடத்திட்ட விசா வைத்திருப்பவர்கள் யாவரும் தொடர்ந்து தங்களின் விண்ணப்பத்தை முன்னிருத்தலாம். 

இந்நிலையில் அதிபர் டிரம்பின் புதிய கல்வி கொள்கை காரணமாக வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி பயில வேண்டுமா இல்லையா என்பது குறித்து யோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அமெரிக்காவில் முறையாக கல்வி பயில விரும்பும் மலேசிய மாணவர்கள் அமெரிக்கா தூதரகம் நடத்தும் நேர்முக தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. 

முன்னதாக, கடந்த மே 22ஆம் தேதி அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அனைத்துலக மாணவர்களை சேர்க்கும் கொள்கைக்குத் தடை விதித்து விதித்தது. 

அதிபர் டிரம்பின் இந்த முடிவை எதிர்த்து  HARVARD CLUB OF MALAYSIA அமைப்பு கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தது.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset