நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

8 சட்ட கேள்விகளைப் பரிந்துரைக்கக் கோரிய டத்தோஶ்ரீ அன்வாரின் விண்ணப்பம் நாளை விசாரிக்கப்படும்

கோலாலம்பூர்:

வழக்கில் இருந்து விலக்கு அளிப்பது உட்பட 8 சட்ட கேள்விகளைப் பரிந்துரைக்கக் கோரிய பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாரின் விண்ணப்பம் நாளை விசாரிக்கப்படும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் எட்டு சட்டக் கேள்விகளை மத்திய நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பது தொடர்பான நடவடிக்கைகளில் சேர மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள்  உயர் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது முன்னாள் ஆராய்ச்சி உதவியாளர் முகமது யூசோஃப் ராவ்தர் தனக்கு எதிராகத் தொடுத்த சிவில் வழக்கிலிருந்து டத்தோஶ்ரீ அன்வாருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் இதில் அடங்கும்.

எட்டு கேள்விகளையும் மத்திய நீதிமன்றத்திற்கு அனுப்பி, பிரதான வழக்கின் விசாரணையை ஒத்திவைக்குமாறு பிரதமரின் விண்ணப்பம் நாளை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.

நீதிபதி ரோஸ் மாவர் ரோசெய்ன் முன் இது விசாரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset