
செய்திகள் மலேசியா
இந்திய பெண்கள் வர்த்தகத்தில் சாதிக்க பெண் 2.0 திட்டம் உறுதுணையாக இருக்கும்: ஹேமலா
கோலாலம்பூர்:
இந்திய பெண்கள் வர்த்தகத்தில் சாதிக்க அமானா இக்தியாரின் பெண் 2.0 திட்டம் உறுதுணையாக இருக்கும்.
மைக்கியின் மகளிர் பிரிவுத் தலைவர் எஸ். ஹேமலா இதனை கூறினார்.
50 மில்லியன் ரிங்கிட் நிதியுடன்அமானா இக்தியாரின் பெண் திட்டத்தை கடந்தாண்டு தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் அறிவித்தார்.
இதுவொரு கடன் திட்டம் என ஆரம்பத்தில் பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும் இந்திய பெண்கள் மத்தியில் இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இலக்கிடப்பட்ட காலத்திற்குள் அந்நிதி இந்திய பெண் வர்த்தகர்களை சென்றடைந்தது. கிட்டத்தட்ட 6,247 வர்த்தகர்களுக்கு 42,725,640 மில்லியன் ரிங்கிட் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இத்திட்டம் பெண் வர்த்தகர்களுக்கு பெரும் பயனையளித்ததை தொடர்ந்து டத்தோஶ்ரீ ரமணன் இவ்வாண்டு பெண் 2.0 திட்டத்தை அறிவித்துள்ளார்.
குறிப்பாக இவ்வாண்டு 100 மில்லியன் ரிங்கிட்டை இந்த பெண் திட்டத்திற்காக ஒதுக்கப்படுகிறது என்று அவர் அறிவித்துள்ளார்.
இந்திய பெண்கள் வர்த்தகத்தில் தங்களை மேம்படுத்திக் கொள்ள இதுவொரு சிறந்த வாய்ப்பாகும்.
அதே வேளையில் புதியதாக வர்த்தகத்தை தொடங்க விரும்பும் இந்திய பெண்களுக்கும் இதுவொரு பொன்னான வாய்ப்பாகும்.
ஆகவே இனியும் காலத்தையும் நேரத்தையும் விரயமாக்காமல் இந்திய பெண்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பெண் 2.0 திட்டம் குறித்து முழு விவரம் பெற இந்திய பெண்கள் அருகில் உள்ள அமானா இக்தியார் அலுவலகங்களுக்கு நேரடியாக செல்லலாம் என்று தொழில் முனைவருமான ஹேமலா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 5, 2025, 5:51 pm
மெனாரா இல்ஹாமை எம்ஏசிசி மீண்டும் கைப்பற்றியது
June 5, 2025, 4:36 pm
பராமரிப்புப் பணிகளுக்காக நவம்பர் 30 வரை இரவு வேளையில் சுங்கை பீசி நெடுஞ்சாலை மூடப்படும்
June 5, 2025, 11:56 am
மலேசியாவில் 20 சதவீதம் மட்டுமே பொதுப் போக்குவரத்தின் பயன்பாடு உள்ளது: அந்தோனி லோக்
June 5, 2025, 10:31 am