
செய்திகள் மலேசியா
செயற்கை நுண்ணறிவு சட்டம் தொடர்பான முழு அறிக்கை; ஜூன் மாத இறுதிக்குள் தயாராகும்: கோபிந்த் சிங்
புத்ராஜெயா:
செயற்கை நுண்ணறிவு சட்டம் தொடர்பான முழு அறிக்கை ஜூன் மாத இறுதிக்குள் தயாராகும்.
இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இதனை கூறினார்.
தரவு பகிர்வு சட்டம் 2025 (சட்டம் 864) அமலாக்கத்திற்கு ஆதரவாக தரவு இலக்கவியல் மயமாக்கல் தொடர்பான அறிக்கை அடுத்த மாதத்திற்குள் விரிவாக வெளியிடப்படும்.
கேள்விக்குரிய கொள்கை சேவை வழங்கலில் தரவு இலக்கவியல் மயமாக்கலை செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
மேலும் தரவு தர நிர்வாகம், தரவு பாதுகாப்பு நெறிமுறைகள், நிர்வாக விவகாரங்களில் டிஜிட்டல் கலாச்சாரம் ஆகியவற்றின் அம்சங்களை உள்ளடக்கியது.
இது முக்கியமானது. காரணம் ஏனென்றால் செயற்கை நுண்ணறிவு துறையில் நாம் வெற்றி பெற, நம்மிடம் உள்ள தரவு இலக்கவியல் தரவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கடந்த காலத்திலிருந்து, படங்கள், ஆடியோ அல்லது கலவைகள் வடிவில் இன்னும் அனலோக் வடிவத்தில் நிறைய தரவுகள் உள்ளன.
எனவே நான் தேசிய இலக்க்கவியல் துறைக்கு மூன்று மாதங்கள் அவகாசம் அளித்துள்ளேன்.
இந்த மாதம் இல்லையென்றால், ஜூலை மாதத்தில், அமைச்சரவையில் முன்மொழிவை முன்வைப்பேன் என்று நம்புகிறேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 5, 2025, 5:51 pm
மெனாரா இல்ஹாமை எம்ஏசிசி மீண்டும் கைப்பற்றியது
June 5, 2025, 4:36 pm
பராமரிப்புப் பணிகளுக்காக நவம்பர் 30 வரை இரவு வேளையில் சுங்கை பீசி நெடுஞ்சாலை மூடப்படும்
June 5, 2025, 11:56 am
மலேசியாவில் 20 சதவீதம் மட்டுமே பொதுப் போக்குவரத்தின் பயன்பாடு உள்ளது: அந்தோனி லோக்
June 5, 2025, 10:31 am