நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடல் உணவு உற்பத்தி 14.2 லட்சம் மெட்ரிக் டன்களை எட்டியது

கோலாலம்பூர்:

கடந்தாண்டு கடல் மீன்பிடி நடவடிக்கைகள் வழி கடல்சார் உணவு உற்பத்தி அபரிமித வளர்ச்சி கண்டு 14,20,000 மெட்ரிக் டன்களை எட்டியுள்ளது.

அவற்றில் 510,315 மெட்ரிக் டன் கடல் மீன்பிடி நடவடிக்கைகள் வாயிலாகவும் 7,497 மெட்ரிக் டன் தரை மீன் பிடி நடவடிக்கைகள் வாயிலாகவும் பெறப்பட்டதாக மலேசிய மீன்பிடித் துறை அறிக்கையில் கூறியது.

மொத்தம் 179 கோடி வெள்ளி மதிப்புள்ள 1940000 மெட்ரிக் டன் உற்பத்தியை பதிவு செய்ததன் மூலம் மீன்பிடித் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7 விழுக்காட்டு பங்களிப்பை வழங்கியதாக அது குறிப்பிட்டது.

மலேசியர்களின் சராசரி மீன் பயனீடு ஆண்டுக்கு 44.7 கிலோகிராமாக உள்ளது. 

கடந்தாண்டு மீனுக்கான சராசரி தனிமனித பயனீடு (எஸ்.எஸ்.ஆர்.) மிக உயர்வான அளவை அதாவது 90.7 விழுக்காட்டை பதிவு செய்துள்ளது.

மலேசியர்களின் பிரதான அசைவ உணவில் முக்கிய பொருளாக விளங்குகிறது என மீன்பிடித் துறையின் அந்த அறிக்கை கூறியது.

மலேசிய மீன்பிடித் துறை மற்றும் வோர்ல்ட் பீஷ் அமைப்புக்கும் இடையிலான 25 ஆண்டுகால வியூக ஒத்துழைப்பின் நிறைவையொட்டி இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset