
செய்திகள் மலேசியா
சட்டவிரோத வழியைப் பயன்படுத்தி ஹஜ் யாத்திரை செய்ய முயன்ற இந்தோனேசிய யாத்ரீகர் பாலைவனத்தில் மரணமடைந்தார்
ரியாத்:
சட்டவிரோத வழியைப் பயன்படுத்தி ஹஜ் யாத்திரை செய்ய முயன்ற இந்தோனேசிய யாத்ரீகர் பாலைவனத்தில் மரணமடைந்தார்.
சவூதி அரேபியாவின் அல்-ஜும்ம் பாலைவனப் பகுதியில் நீரிழப்பு காரணமாக அவர் மரணமடைந்துள்ளார்.
மெக்காவில் ஹஜ் யாத்திரை செய்ய அவர் அங்கீகரிக்கப்படாத பாலைவனப் பாதை வழியாகப் பயணித்ததாக செய்தி வெளிவந்துள்ளது.
ஜெட்டாவில் உள்ள இந்தோனேசிய துணைத் தூதரக ஜெனரல் யூஸ்ரோன் அம்பரி,
மரணமடைந்த அந்த ஆடவர் மேலும் இரண்டு இந்தோனேசியர்களுடன் பாலைவனத்தில் சிக்கித் தவித்ததாக தெரிகிறது.
அவர்கள் மூவரும் அதிகாரப்பூர்வ நடைமுறைகள் இல்லாமல் மெக்காவிற்குள் நுழைய முடிவு செய்தனர் என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட மூவரும் பல விசாக்களை வைத்திருந்தனர்.
விசாக்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் சவூதி அரேபியாவிற்கு பல முறை வருகை தர அனுமதித்தாலும், அவை ஹஜ்ஜுக்கு செல்லுபடியாகாது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 4, 2025, 9:58 am
நிதி முறைகேடுகளை நிவர்த்தி செய்ய சிறப்பு பணிக்குழு அமைக்கப்படும்: பிரதமர் அன்வார்
June 3, 2025, 6:04 pm
இந்திய பெண்கள் வர்த்தகத்தில் சாதிக்க பெண் 2.0 திட்டம் உறுதுணையாக இருக்கும்: ஹேமலா
June 3, 2025, 5:57 pm
கலைஞர் பிறந்த நாளை அன்ன தானம் வழங்கிக் கொண்டாடிய மலேசிய அயலகத் தமிழ் அமைப்பினர்
June 3, 2025, 5:31 pm
கடல் உணவு உற்பத்தி 14.2 லட்சம் மெட்ரிக் டன்களை எட்டியது
June 3, 2025, 5:12 pm
மூன்று மாநிலங்களில் வெப்ப நிலை 37 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது
June 3, 2025, 5:11 pm