
செய்திகள் மலேசியா
மூன்று மாநிலங்களில் வெப்ப நிலை 37 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது
கோலாலம்பூர்:
பேராக், கிளந்தான், கெடா ஆகிய மூன்று மாநிலங்களிலுள்ள பல மாவட்டங்களில் வெப்ப நிலை தொடர்ந்து மூன்று நாட்களாக அதிகபட்சம் 37 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது.
அதனால் அம்மூன்று மாநிலங்களில் தற்போது வானிலை எச்சரிக்கை கட்டத்தில் இருப்பதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
பேராக்கில் Larut & Matang, Kuala Kangsar மற்றும் மத்திய பேராக் ஆகிய மாவட்டங்களும் கிளந்தானின் மாச்சாங், கோல கிராய் ஆகிய மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மெட்மலேசியா தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சபா மற்றும் சரவாக் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தினசரி வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாகவே பதிவாகியுள்ளது.
தொடர்ச்சியான வெப்ப வானிலையால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சுட்டெரிக்கும் வெயிலில் வெளிப்புற நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர்ப்பது, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, நிழலில் அல்லது குளிரூட்டப்பட்ட இடங்களில் தங்குவது ஆகியவை இதில் அடங்கும்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 5, 2025, 4:36 pm
பராமரிப்புப் பணிகளுக்காக நவம்பர் 30 வரை இரவு வேளையில் சுங்கை பீசி நெடுஞ்சாலை மூடப்படும்
June 5, 2025, 11:56 am
மலேசியாவில் 20 சதவீதம் மட்டுமே பொதுப் போக்குவரத்தின் பயன்பாடு உள்ளது: அந்தோனி லோக்
June 5, 2025, 10:31 am
குற்றம் செய்யவில்லை என்றால், அன்வார் ஏன் விலக்குரிமை கேட்க வேண்டும்: துன் மகாதீர்
June 5, 2025, 10:30 am