
செய்திகள் மலேசியா
7 வருடங்களாகப் பிள்ளைகளைப் பள்ளிக்குப் படகில் ஏற்றி செல்லும் தந்தை
கோலாலம்பூர்:
கல்வியின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு கடந்த 7 வருடங்களைத் தனது இரு பிள்ளைகளைப் பள்ளிக்கு படகில் ஏற்றி செல்லும் தந்தையின் காணொலி சமூக ஊடகங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
தீயோமான் தீவிற்கு மறுபக்கம் வசிக்கும் 42 வயதான Jamaluddin Musa தனது இரு பிள்ளைகள் Armin, Aida ஆகிய இருவரையும் தினமும் காலையில் படகில் ஏற்றி சென்று பகாங் ரொம்பினிலுள்ள செகோலா கெபாங்சான் டெகெக்கில் Tekek தேசிய பள்ளியில் விடுகின்றார்.
பள்ளிக்கு நடந்து செல்ல சுமார் நான்கு மணி நேரமாகும் என்பதால் Jamaluddin Musa தினமும் பிள்ளைகளைப் படகில் ஏற்று சென்று விடுகின்றார்.
ஸ்கூபா டைவிங் பயிற்றுவிப்பாளராக, Jamaluddin Musa-விற்கு படகு சவாரி செய்வது கடினமானது இல்லையென்றாலும் சில நேரங்களில் கடல் நீர் கொந்தளிப்பை கணிக்க முடியாத நிலை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிள்ளைகளின் கல்விக்காக 6000 ரிங்கிட் செலவிட்டு படகிற்கு புதிய இயந்திரத்தை மாற்றியதாகவும் Jamaluddin Musa குறிப்பிட்டுள்ளார்.
Jamaluddin Musa வின் இந்த செயல் தந்தையின் அர்ப்பணிப்பை காட்டுவதாக சமூக ஊடங்களில் மக்கள் பதிவிட்டுள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 5, 2025, 4:36 pm
பராமரிப்புப் பணிகளுக்காக நவம்பர் 30 வரை இரவு வேளையில் சுங்கை பீசி நெடுஞ்சாலை மூடப்படும்
June 5, 2025, 11:56 am
மலேசியாவில் 20 சதவீதம் மட்டுமே பொதுப் போக்குவரத்தின் பயன்பாடு உள்ளது: அந்தோனி லோக்
June 5, 2025, 10:31 am
குற்றம் செய்யவில்லை என்றால், அன்வார் ஏன் விலக்குரிமை கேட்க வேண்டும்: துன் மகாதீர்
June 5, 2025, 10:30 am