நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமைச்சராவதால் சுங்கை துவா சட்டமன்றத் தொகுதியை காலி செய்யவுள்ளேன் என்பது சில நபர்களின் கற்பனை மட்டுமே: அமிருடின் ஷாரி

ஷாஆலம்:

அமைச்சராவதால் சுங்கை துவா சட்டமன்றத் தொகுதியை காலி செய்யவுள்ளேன் என்பது சில நபர்களின் கற்பனை மட்டுமே.

இதில் எந்த உண்மையும் இல்லை என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி இதனை கூறினார்.

டத்தோஶ்ரீ தெங்கு ஸப்ருல் சிலாங்கூர் மந்திரி புசாராக உள்ளார்.

அவருக்கு வழிவிடும் நான் சுங்கை துவா சட்டமன்ற தொகுதியை காலி செய்யவுள்ளேன் என செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்த கூற்று  ஒரு குறிப்பிட்ட நபரின் கற்பனையே..  வெற்றுப் பேச்சு தான்.

என்னுடைய இந்த பதவிக் காலத்தில் தனது கடமைகளை முழுமையாகவும் அமைதியாகவும் முடிக்க விரும்புகிறேன்.

அதுவரை நான் மந்திரி புசாராக பதிவை தொடர்வேன் என்று டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset