நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தின் தொழில்நுட்ப விசாரணை ஜூன் 26ஆம் தேதிக்குள் நிறைவடையும்: அமிருடின் ஷாரி

ஷாஆலம்:

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் தொடர்பான தொழில்நுட்ப விசாரணை ஜூன் 26 ஆம் தேதிக்குள் நிறைவடையும்.

சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இதனை கூறினார்.

பொதுமக்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்பு முழுமையான விசாரணையை உறுதி செய்வதற்காக, விசாரணை குற்றவியல் விசாரணையுடன் இணைக்கப்படும்.

மேலும் தொழில்நுட்ப விசாரணை கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள், அதாவது ஜூன் 26 ஆம் தேதிக்குள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடையும்.

குற்றவியல் விசாரணையில் இன்னும் இடைவெளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதை தொழில்நுட்ப விசாரணையுடன் இணைக்க வேண்டியிருப்பதால், குற்றவியல் விசாரணையை இப்போது வெளியிட முடியாது.

குறிப்பாக குழாய்களின் ஒருமைப்பாடு, மண் இயக்கம், வெளிப்புற நடவடிக்கைகள் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றனவா,

இவை அனைத்தும் தொழில் பாதுகாப்பு, சுகாதாரத் துறையின் தொழில்நுட்ப மேற்பார்வையின் கீழ் விசாரணையின் எல்லைக்குள் உள்ளன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset