நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெடுஞ்சாலை கட்டுமான நிதியிலிருந்து 20 மில்லியன் ரிங்கிட் சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம்: டான்ஶ்ரீ அஸாம் பாக்கி

புத்ராஜெயா:

நெடுஞ்சாலை கட்டுமான சுகுக் நிதியிலிருந்து மொத்தம் 20 மில்லியன் ரிங்கிட் தவறாகவும்  சூதாட்ட நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அசாம் பாக்கி இதனை தெரிவித்தார்.

டான்ஸ்ரீ அந்தஸ்து கொண்ட ஒரு முக்கிய நபரை உள்ளடக்கிய சமீபத்திய விசாரணையில் இந்த விஷயம் கண்டறியப்பட்டது.

மேலும் பல முதலீடுகளும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் உள்ளவை உட்பட சுகுக் நிதியை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் பெறப்பட்டதாக நம்பப்படும் சொத்துக்களை  எம்ஏசிசி கண்காணித்து வருகிறது.

இதுவரை 45 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டான் ஸ்ரீயின் வாக்குமூலத்திற்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம், என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset