நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தலைவர்களின் ஒவ்வொரு செயலும் நல்லிணக்கம், சமரசம், மக்கள் மீதான பொறுப்புணர்வு ஆகிய கொள்கைகளை அடிப்படையாக கொண்டிருக்க  வேண்டும்: டத்தோஶ்ரீ  ரமணன்

கோலாலம்பூர்:

தலைவர்களின் ஒவ்வொரு செயலும் நல்லிணக்கம், சமரசம் மக்கள் மீதான பொறுப்புணர்வு ஆகிய கொள்கைகளை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் இதனை கூறினார்.

சமூகத் தலைவர்கள் முக்கியமான பிரச்சினைகளில் அரசியல் விளையாட வேண்டாம் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தினஅர்.

மாமன்னரின் இந்த வலியுறுத்தல் மிகவும் சரியான நேரத்தில் வந்துள்ளன.

மேலும் அரசியல் அல்லது இன பின்னணியைப் பொருட்படுத்தாமல், அனைத்துத் தலைவர்களாலும் இது முக்கிய வழிகாட்டுதலாக மாற்றப்பட வேண்டும்.

மேலும் தலைவர்களின் ஒவ்வொரு செயலும் பேச்சும் பல்லன நாடு என்ற மலேசியாவின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப,

நல்லிணக்கம், சமரசம், மக்கள் மீதான பொறுப்புணர்வு ஆகிய கொள்கைகளை அடிப்படையாக கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மலேசியா புரிதலின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. இது அரசியல் பிரிவினையின் களமாக அல்ல.

மாறாக ஒற்றுமையின் களமாக இருக்க வேண்டும் கெஅடிலான் உதவித்  தலைவருமான டத்தோஶ்ரீ ரமணன் கூறினார்

அமைதியான, ஒன்றுபட்ட மலேசியாவின் எதிர்காலத்திற்காக, அரசியலமைப்பின் உணர்வை மதிக்க மேண்டும்,

குறிப்பாக மாமன்னரின் ஆணையை நிலைநிறுத்தவும் அனைத்து தரப்பினரையும் நான் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset