
செய்திகள் மலேசியா
அன்னையர்களின் தியாகங்களுக்கு உரிய அங்கீகாரத்தை செய்வோம்: பிரபாகரன்
அம்பாங்:
அன்னையர்களின் தியாகங்களுக்கு உரிய அங்கீகாரத்தை செய்வோம் என்று கெஞ்சானா மஇகா கிளைத் தலைவர் பிரபாகரன் கணேசன் கூறினார்.
தாய்மார்களின் தியாகங்கள், அர்பணிப்புகளை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
அவ்வகையில் பாண்டான் தொகுதி மஇகா, கெஞ்சானா மஇகா கிளை கூட்டணியில் அன்னையர் தினம் சிறப்பாக முறையில் கொண்டாடி வருகிறது.
பாண்டான் வட்டாரத்தில் உள்ள அன்னைமார்கள் இந்நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்பட்டனர்.
தாய் என்பவர் குடும்பத்தின் தலைவியாக இருந்து குடும்பத்திற்கு வழிகாட்டியாய் விளங்குவதோடு குடும்ப மேம்பாட்டிற்கு பெரிதும் துணையாக இருக்கிறார்.
அத்தகைய தாய்மார்களை சிறப்பிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மேலும் அனைத்து தாய்மார்களுக்கு சிறப்பு செய்யப்பட்டதுடன் அணிச்சலும் வெட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த கிளை பொறுப்பாளர்களும் மகளிர் பிரிவினருக்கும் நன்றி என்று பிரபாகரன் கூறினார்.
மஇகா உதவித் தலைவர் டத்தோ அசோஜன், சிலாங்கூர் மாநில மஇகா தலைவர் சங்கர் ஐயங்கார், செயலாளர் சசிதரன், தொகுதித் தலைவர் ராஜமோகன், துணைத் தலைவர் நாராயணசாமி, உதவித் தலைவர் பாஸ்கரன், காந்தன் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 4, 2025, 10:33 am
எல்ஆர்டி தண்டவாளத்தில் விழுந்த தைவான் நபர் மரணம்
June 4, 2025, 9:58 am
நிதி முறைகேடுகளை நிவர்த்தி செய்ய சிறப்பு பணிக்குழு அமைக்கப்படும்: பிரதமர் அன்வார்
June 3, 2025, 6:04 pm
இந்திய பெண்கள் வர்த்தகத்தில் சாதிக்க பெண் 2.0 திட்டம் உறுதுணையாக இருக்கும்: ஹேமலா
June 3, 2025, 5:57 pm
கலைஞர் பிறந்த நாளை அன்ன தானம் வழங்கிக் கொண்டாடிய மலேசிய அயலகத் தமிழ் அமைப்பினர்
June 3, 2025, 5:31 pm
கடல் உணவு உற்பத்தி 14.2 லட்சம் மெட்ரிக் டன்களை எட்டியது
June 3, 2025, 5:12 pm