நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆசிரியர்கள் எழுச்சி பெற வேண்டிய அவசரத் தேவையில்லை: என்யூடிபி

கோலாலம்பூர்:

ஆசிரியர்கள் எழுச்சி பெற வேண்டிய அவசரத் தேவையில்லை.

என்யூடிபி எனப்படும்  தீபகற்ப மலேசியாவின் தேசிய ஆசிரியர் சங்கம் இதனை கூறியது.

கடந்த காலத்தில் ஆசிரியர்களால் முழுமையாக வழிநடத்தப்பட்ட தேசியவாத சகாப்தம் தற்போதைய அரசியல்,  சமூக சூழலில் இனி அவசரத் தேவை இல்லை.

சுதந்திரம், கலாச்சாரம்,  அரசியலுக்கான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய மலாய் ஆசிரியர்கள் தங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்பாட்டுப் பங்கை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என இந்திரா மக்கோத்தா நாடாளுமன்ற உறுப்பினர் சைபுடின் அப்துல்லா அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் தீபகற்ப மலேசியாவின் தேசிய ஆசிரியர் சங்கம் இவ்வாறு கூறியது.

முந்தைய சகாப்தத்தைப் போல இப்போது முறையாக முன்னணியில் இல்லாவிட்டாலும்,

நாட்டின் தலைமையை விமர்சிப்பதில் ஆசிரியர்கள் இன்னும் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று என்யூடிபி  பொதுச் செயலாளர் ஃபௌஸி சிங்கோன் கூறினார்.

மேலும் மலாய் சமூகத்தின் தொழில் பின்னணிகள் மிகவும் பன்முகத்தன்மை கொண்டதாகவும் பொருள் சார்ந்ததாகவும் இருப்பதால், போராட்டத்தின் நிலப்பரப்பும் மாறிவிட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset