நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மண்டி பூங்கா செய்தால் கோடீஸ்வரர்கள் ஆகி விடலாம் என்றால் மலேசியாவில் ஏழை இந்தியர்களே இருக்க மாட்டார்கள்: டத்தோஸ்ரீ சரவணன்

போர்ட்டிக்சன்:

மண்டி பூங்கா செய்தால் கோடீஸ்வரர்கள் ஆகி விடலாம் என்றால் மலேசியாவில் ஏழை இந்தியர்களே இருக்க மாட்டார்கள்.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

போர்ட்டிக்சன் பாசிர் பஞ்சாங் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட இக் கும்பாபிஷேக விழாவில் உரையாற்றிய டத்தோஸ்ரீ சரவணன்,

இவ்வாலயத்தின் திருப்பணிகளை முடித்து வெற்றிகரமாக கும்பாபிஷேக விழாவை நடத்திய ஆலய நிர்வாகத்திற்கு எனது பாராட்டுகள்.

காரணம் நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு தான் கும்பாபிஷேகம் நடத்துவதில் உள்ள சிக்கல்கள் தெரியும்.

அதேவேளையில் ஒரு கும்பாபிஷேகத்தை பார்ப்பது எவ்வளவு பெரிய புண்ணியம் என்பது பயனடைந்தவர்களுக்குத்தான் தெரியும்.

காரணம் ஆலயங்கள் அருகிலேயே வசிப்பார்கள். ஆனால் அந்த ஆலய கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள்.

பெற்றோர்கள், மனைவி, பிள்ளைகளை இறக்கி விட வருவார்கள். ஆனால் ஆலயத்திற்குள் நுழைய மாட்டார்கள்.

இது எவ்வளவு பாவம் என்று அவர்களுக்கு தெரியவில்லை.

காரணம் கும்ப தீர்த்தத்தைவிட மண்டி பூங்கா நீர் மகத்துவமானது என்று நினைக்கக் கூடிய காலக் கட்டத்தில் நாம் வாழ்கிறோம்.

உண்மையிலேயே மண்டி பூங்கா - பூக்குளியல் - செய்தால் கோடீஸ்வரர் ஆகி விடலாம் என்றால் மலேசியாவில் ஏழை இந்தியர்களே இருக்க மாட்டார்கள்.

ஆனால் நிலைமை அப்படியாக இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதுபோன்ற பிரச்சினைக்கு எல்லாம் நம் சமுதாயத்திடையே சமய புரிதல், தெளிவு இல்லாததே முக்கிய காரணம்.

ஆக மக்கள் சமய விவகாரங்களில் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார். 

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset