
செய்திகள் மலேசியா
சவூதியில் 50 டிகிரி செல்சியஸ் வெய்யில்: கடும் வெப்பமான வானிலையால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கூடாரங்களில் தங்குமாறு மலேசிய ஹஜ் பயணிகளுக்கு அறிவுறுத்தல்
மெக்கா:
சவூதியில் கடும் வெப்பமான வானிலையால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஹஜ் யாத்ரீகர்கள் கூடாரங்களில் தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தாபோங் ஹாஜியின் மலேசிய ஹஜ் குழுவின்தலைவர் முஹம்மத் ஹிஷாம் ஹாருன் இதனை தெரிவித்தார்.
மிகவும் வெப்பமான வானிலை தற்போது அங்கு நிலவுகிறது. இன்னும் சில நாட்களில் வெப்பத்தின் அளவு 50 டிகிரி செல்சியஸை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் மலேசிய புனிதப் பயணிகள் கூடாரங்களில் தங்கியிருக்க வேண்டும். சூரிய ஒளியை நேரடியாக தவிர்க்கவும் இது பரிந்துரைக்கப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள ஹஜ் குழுத் தலைவர்களின் வாட்ஸ்அப் குழு மூலமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சவூதி அரேபியாவின் ஹஜ், உம்ரா அமைச்சின் சர்வதேச உறவுகள் துணையமைச்சர் டாக்டர் ஹசன் யஹ்யா அல்-மனாக்ராவுடனான எனது சந்திப்பின் போது இது உறுதி செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am