நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்பு அசாம் பாக்கியை எதிர்த்ததை நம்பிக்கை கூட்டணி மறந்து விட்டதா?: மூடா கேள்வி

கோலாலம்பூர்:

டான்ஸ்ரீ அசாம் பாக்கியை முன்பு எதிர்த்ததை நம்பிக்கை கூட்டணி மறந்து விட்டதா? என்று மூடா கட்சியின் இடைக்கால தலைவர் அமிரா ஆஸ்யா அப்துல் ஹஜிஸ் கேள்வி எழுப்பினார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கிக்கு எதிரான முந்தைய நிலைப்பாட்டை நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் மறந்துவிட்டார்களா?.

டான்ஸ்ரீ அசாமை ராஜினாமா செய்யக் கோரி நடந்த பேரணியில், புத்ரி வாங்சா சட்டமன்ற உறுப்பினருமான அவர் கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தை நினைவு கூர்ந்தார்.

அந்த போராட்டத்தில் நம்பிக்கை கூட்டணி தலைவர்களும் கலந்து கொண்டனர்.

அந்த நேரத்தில் தெருக்களில் அவர்கள் என்னுடன் இருந்தனர். போலிசாரால்  ஒன்றாக விசாரிக்கப்பட்டனர்.

ஊழலை நிராகரிக்க விரும்புவதாக  எங்களுடன் இணைந்து கூறினர்.

ஆனால் இன்று மடானி அரசாங்கத்தில் உள்ள நம்பிக்கை கூட்டணி நண்பர்கள் அதனை மறந்து விட்டனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset