
செய்திகள் மலேசியா
இனம், பின்னணி பாராது மக்களின் நலனுக்காக கெஅடிலானின் புதிய தலைமைத்துவம் போராட வேண்டும்: குணராஜ்
செந்தோசா:
இனம், பின்னணி பாராது மக்களின் நலனுக்காக கெஅடிலானில் புதிய தலைமைத்துவம் போராட வேண்டும்.
கெஅடிலான் மத்திய செயலவை உறுப்பினரான குணராஜ் இதனை வலியுறுத்தினார்.
கட்சியில் முழு அர்ப்பணிப்பு உணர்வோடு தொடர்ந்து சேவையாற்றுவதற்கு தனக்கு உத்வேகத்தை ஏற்படுத்திய பிரதமரும் கெஅடிலான் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு நன்றி.
அதேவேளையில், இத் தேர்தலில் தன் மீது நம்பிக்கை வைத்து தனக்கு முழு ஆதரவு வழங்கிய கெஅடிலான் கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
முன்னேற்றகரமான, அனைவருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்ற போராட்டத்திற்கான நமது கட்சியின் இலக்கு மீது உறுப்பினர்கள் கொண்ட நம்பிக்கையையே இது காட்டுகிறது.
சரிசமமான, ஒன்றுபட்ட மலேசியாவை உருவாக்க பல்லின மக்களின் குரலை மேலோங்கச் செய்யும் நமது கடப்பாட்டையும் இது பறைசாற்றுகிறது .
இத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை வலுப்படுத்த வேண்டும்.
இனம், பின்னனி பாராது மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து நாம் போராட வேண்டும் என குணராஜ் கூறினார்.
- பார்த்தின் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am