நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குவாந்தான் பஞ்சிங் செராஸ் குகையில் அமைந்துள்ள மகா ஜல லிங்கேஸ்வரர் ஆலயப் பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்

குவாந்தான்:

குவாந்தான் பஞ்சிங் செராஸ் குகையில் அமைந்துள்ள மகா ஜல லிங்கேஸ்வரர் ஆலயப் பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்பட வேண்டும்.

மஹிமாவின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை வலியுறுத்தினார்.

குவாந்தான் பஞ்சிங் மகா ஜல லிங்கேஸ்வரர் ஆலயத்தில்
 பிரதோஷ சிறப்பு பூஜைகள் நேற்று விமரிசையாக நடைபெற்றது.

ஆலயத் தலைவர் கே. பாலகிருஷ்ணனின் அழைப்பின் பேரில் இப் பூஜையில் கலந்து கொண்டேன்.

மேலும்  ​​மஹிமாவின் உறுப்பினர் சான்றிதழை ஆலயத் தலைவரிடம் வழங்கினேன்.

ஆலயங்களுக்கு இடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதிலும், இந்து சமூகத்தை மேம்படுத்துவதிலும் மஹிமா தொடர்ந்து கவனம் செலுத்தும்.

அதே வேளையில் ஆலய நிர்வாகங்களும் இதுபோன்ற திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

அவ்வகையில் இன்றைய நிகழ்வு பக்தர்களிடமிருந்து வலுவான ஆதரவு கிடைத்துள்ளது என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

குகையில் அமைந்துள்ள இவ்வாலயத்தை காலி செய்ய வேண்டும் என குவாந்தான் மாவட்ட மன்றமும் நில அலுவலகமும் நோட்டீஸ் அனுப்பியுள்ளன.

ஆனால் இவ்வாலயம் முறையாக செயல்பட்டு வருகிறது. அனைத்து ஆவணங்களும் முறையாக உள்ளன.

இந்த ஆவணங்கள் அனைத்தும் மாநில அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் ஆட்சிக் குழு உறுப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

ஆகவே இந்த ஆலயப் பிரச்சினைக்குன் சுமூகமான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று டத்தோ சிவக்குமார் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset