நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா- சிங்கப்பூர் அரச தந்திர உறவுகள் தொடர்ந்து வலுப்பெறும்: துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ ஃபாடில்லாச் யூசோஃப் நம்பிக்கை 

கோலாலம்பூர்: 

மலேசியா- சிங்கப்பூர் இடையிலான அரச தந்திர உறவுகள் தொடர்ந்து வலுப்பெறும் என்று துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ ஃபாடில்லா யூசோப் நம்பிக்கை தெரிவித்தார். 

சிங்கப்பூர் நாட்டின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனுடன் நடந்த விருந்து நிகழ்ச்சிக்குப் பிறகு ஃபாடில்லா யூசோஃப் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். 

இரு தலைவர்களின் சந்திப்பு என்பது மலேசியா - சிங்கப்பூர் இரு நாடுகளின் அனைத்து வகையிலான ஒத்துழைப்பினை மேலோங்க செய்ய வழிவகுக்கும் என்றும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு நல்கப்படும் என்று அவர் கூறினார். 

கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் கூட்டத்தில் கலந்து கொண்ட   சிங்கப்பூர் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனை துணைப்பிரதமர் சந்தித்த புகைப்படத்தை பாடில்லா யூசோப் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset