
செய்திகள் மலேசியா
கெடிலானில் உறவினர்களுக்கான சலுகை குறித்து ஏன் இதற்கு முன்பு பிரச்சினை எழவில்லை: அன்வார்
ஜொகூர்பாரு:
கெஅடிலான் கட்சியில் உறவினர்களுக்கான சலுகை குறித்து ஏன் இதற்கு முன்பு பிரச்சினை எழவில்லை.
கெஅடிலான் தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இக்கேள்வியை எழுப்பினார்.
கட்சித் தேர்தலில் துணைத் தலைவராக நூருல் இசா வெற்றி பெற்றார்.
இதை தொடர்ந்து மனைவி, குழந்தைகளின் கட்சி என கெஅடிலானுக்கு எதிராக முத்திரை குத்தப்படுகிறதும். இதை நான் வண்மையாக கண்டிக்கிறேன்.
நான் சிறையில் அடைக்கப்பட்டபோது கெஅடிலான் தலைவராகப் பணியாற்றிய தனது மனைவி டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலுக்கு எனது நன்றி.
மேலும் நூருல் இசா தனது போராட்டத்தைத் தொடர தனது பல்கலைக்கழகப் படிப்பை விட்டுவிட்டார். அந்த நேரத்தில் அது நிச்சயமற்றது.
நாங்கள் முதன் முதலில் போராடியபோது, எந்த மாநாடும் இல்லை.
யார் தீபத்தை ஏந்துவது என்பது பற்றிய நீண்ட விவாதமும் இல்லை. அதனால் நான் சிறைக்குச் செல்வதற்கு முன்பு அதை அவர்களிடம் ஒப்படைத்தேன்.
நிதி இருக்கிறதா? ஆதரவு கேந்திரம் இருக்கிறதா? என்ற கேள்விகள் இல்லை.
குறிப்பாக அந்த நேரத்தில் குடும்பம், உறவினர்கள் குறித்து எந்த கேள்வியும் எழவில்லை.
பெர்சாடா அனைத்துலக மாநாட்டு மையத்தில் கெஅடிலான் தேசிய மாநாட்டின் இறுதி அமர்வின் போது அவர் இதனை கூறினார்.
ரபிசி ரம்லிக்கு எதிரான நூருல் இஸ்ஸாவின் வெற்றி என்னால் தீர்மானிக்கப்படவில்லை.
மாறாக பிரதிநிதிகளின் வெளிப்படையான வாக்களிப்பு முறையால் தீர்மானிக்கப்பட்டது என்றும் அவர் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am