நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஸ்ரீ அன்வார் நூருல் இசாவுக்கு மட்டும் தந்தை அல்ல: அனைவருக்கும் தந்தை தான்: சைபுடின்

ஜொகூர்பாரு:

கெஅடிலான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார், நூருல் இசாவுக்கு மட்டும் தந்தை அல்ல. அனைவருக்கும் தந்தை தான்.

கெஅடிலான் கட்சியின் முன்னாள் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இதனை கூறினார்.

கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் ரபிசி ரம்லியை நூருல் இசா வென்றார்.

இந்த  கட்சித் தேர்தலில் எடுக்கப்பட்ட எந்த முடிவுகளையும் நான் கேள்வி கேட்கவில்லை.

நான் கேள்வி கேட்க எந்த காரணமும் இல்லை. மேலும் எங்கள் விசுவாசம், எங்கள் அன்பு நீடிக்கும்.

ஏனென்றால் டத்தோஸ்ரீ அன்வர் எங்களை விட மூத்தவர். எங்களை விட அதிக அனுபவம், அன்வரின் மூன்று தியாகங்கள் எங்களை விட அதிகம்.

டத்தோஸ்ரீ அன்வார் அனைவருக்கும் தந்தையாக உள்ளார். அவர் நூருல் இசாவுக்கு மட்டும் தந்தை அல்ல. 

டத்தோஸ்ரீ அன்வாரின் வேண்டுகோளின் பேரில் நம்பிக்கை கூட்டணி பொதுச் செயலாளராக கெஅடிலான் மாநாட்சில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset