நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெஅடிலான் உதவித் தலைவர் தேர்தலில் இரண்டாவது இடத்தில் வெற்றி; எனது தனிப்பட்ட வெற்றி அல்ல, மக்களின் நம்பிக்கை: டத்தோஸ்ரீ ரமணன்

ஜொகூர்பாரு:

கெஅடிலான் தேர்தலில் பெற்ற வெற்றி என்னுடைய தனிப்பட்ட வெற்றி அல்ல.
இது மக்களின் நம்பிக்கையாகும்.

அக்கட்சியின் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் இதனை கூறினார்.

2025-2028 ஆண்டுக்கான கெஅடிலான் கட்சித் தேர்தல் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது.

இந்த தேர்தலில் வெற்றி பெற்று கட்சியின் உதவித் தலைவராக தேர்வு பெற்றார்.

குறிப்பாக அவர் இரண்டாவது இடத்தை பிடித்தார். முன்பு சேவியர் ஜெயக்குமார் நான்காவது இடத்தையே பிடித்தார்.

இந்த வெற்றி குறித்து டத்தோஸ்ரீ ரமணன் கூறியதாவது,

இந்த வெற்றியின் மூலம் மக்களின் குரலை எழுப்பவும், நீதியின் மதிப்புகளை நிலை நிறுத்தவும்  உறுதி கொண்டுள்ளென்.

மேலும்  மடானி மலேசியாவின் குரலை ஒருபோதும் மங்காத சீர்திருத்த உணர்வோடு தேசிய அரங்கிற்குக் கொண்டு வருவதற்கான இலக்கையும் கொண்டுள்ளேன்.

அவ்வகையில் இது ஒரு தனிப்பட்ட வெற்றி அல்ல.

மாறாக முழுப் பொறுப்புடனும், நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் நான் சுமக்கும் மக்களிம் மிகப் பெரிய நம்பிக்கை இதுவாகும்.

மேலும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையில் வலுவான மனப்பான்மையுடன் முன்னேற வேண்டும்.

கெஅடிலான் உறுப்பினர்களும் தலைமையுடன் இணைந்து கட்சியை வலுப்படுத்த வேண்டும்.

குறிப்பாக போராட்டத்தின் இலட்சியவாதத்தை வலுப்படுத்த வேண்டும்

மலேசியாவின் கொள்கைகளை நிலைநிறுத்தும் மக்களுக்கு கெஅடிலான் முக்கிய தளமாக இருப்பதை உறுதி செய்யவும் இதுவே சரியான நேரமாகும்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சருமான டத்தோஸ்ரீ ரமணன் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset