நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் பிரச்சினையில் மக்கள் பிரதிநிதிகள் மௌனம் காக்கிறார்களா?: டத்தோ சிவக்குமார்

கோலாலம்பூர்:

இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் பிரச்சினையில் மக்கள் பிரதிநிதிகள் மௌனம் காக்கிறார்களா என்று டத்தோ சிவக்குமார் கேள்வி எழுப்பினார்.

இந்த ஆண்டு மெட்ரிகுலேஷனுக்கு விண்ணப்பித்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு இடங்கள் வழங்கப்பட்டதற்கான விரிவான விவரங்களைக் கோரி, கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக்கிற்கு  மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் கடிதம் அனுப்பி உள்ளார்.

இந்த கடிதத்தை அனுப்பியதற்காக டத்தோஸ்ரீ சரவணனுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நடவடிக்கை சரியான நடவடிக்கை என்பதால் மட்டுமல்ல, பலர் அமைதியாக இருக்கத் தேர்ந்தெடுத்தபோது அவர் குரல் கொடுக்க முன்வந்ததாலும் பாராட்டப்பட வேண்டும்.

ஒரு கை தட்டினால் ஓசை வராது என்பது பழமொழி. ஒரு தலைவரின் குரல் மட்டும் போதாது. 

நாடாளுமன்றம், சட்டமன்றம், செனட்டர் சபை ஆகியவற்றில் இந்திய சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உள்ளனர். 

ஆனால் இந்த முக்கியமான பிரச்சினையில் அவர்களின் குரல்கள் எங்கே என்று டிஎஸ்கே இயக்கத்தின் தலைவருமான டத்தோ சிவக்குமார் கேள்வி எழுப்பினார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தும் ரசாக்கின் நிர்வாகத்தில் மெட்ரிகுலேஷனில் இந்திய மாணவர்களுக்கு 2,200 இடங்கள் ஒதுக்கப்பட்டன.

இன்றைய பிரதிநிதிகளை விட அப்போது மிகக் குறைவான பிரதிநிதிகள் இருந்தனர். ஆனால் கூடுதல் இடங்கள் பெறப்பட்டது.

இப்போது அரசாங்கத்தில் பல்வேறு முக்கிய பதவிகளில் அதிகமான இந்தியத் தலைவர்கள் உள்ளனர்.

ஆனால் மெட்ரிகுலேஷன் சேர்க்கைக் கொள்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அல்லது சீர்திருத்தம் நம்மால் காண முடியவில்லை.

குறிப்பாக இதில் என்ன நடந்தது? நமது மாணவர்களின் எதிர்காலம் குறித்த கவலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தலைவர்கள் இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்பில் கேள்வி எழுப்ப வேண்டும்.

அதிகாரப்பூர்வ தரவுகளைக் கோர வேண்டும்.மக்களின் தலைவிதிக்காகப் போராட வேண்டும்.

கல்வி, பொருளாதாரம் போன்ற முக்கியமான பிரச்சினைகளில் தைரியமாக குரல் கொடுக்க வேண்டும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஒரு சிலர் மட்டுமே குரல் கொடுக்க முன்வந்துள்ளனர்.

மற்றவர்கள் தங்கள் பதவிகள் அல்லது அந்தந்த அரசியல் நலன்களையோ பராமரிக்க மிகவும் எச்சரிக்கையாக இருப்பதாகக் காணப்படுகிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் எஸ்பிஎம் தேர்வில் 10ஏ, அதற்கு மேல் மதிப்பெண் பெறும் அனைத்து சிறந்த மாணவர்களுக்கும் இனம் அல்லது பின்னணியைப் பொருட்படுத்தாமல் உயர்கல்வித் திட்டங்களில் இடங்கள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்துள்ளது.

இது ஒரு தெளிவான உறுதிமொழி. இருப்பினும் இது வெறும் வாக்குறுதியாக இல்லாமல் இருக்க, அதன் செயல்படுத்தலை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட வேண்டும்.

மேலும் அதன் விவரங்கள் வெளிப்படை தன்மையாக இருக்க வேண்டும் என டத்தோ சிவக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset