நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கால்பந்து மேம்பாட்டிற்கு அடித்தளம் அமைத்தது மீபா: டத்தோஸ்ரீ சரவணன் பாராட்டு

சுங்கை பூலோ:

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கால்பந்து விளையாட்டு மேம்பாட்டிற்கு அடித்தளம் அமைத்தது மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கம் தான்.

மஇகா தேசிய துணை தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை தெரிவித்தார்.

இந்தியர்களுக்காக மீபா பல போட்டிகளை நடத்தி வருகிறது.

அதில் குறிப்பாக தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் வகையில் கால்பந்து போட்டியை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

முன்பு ஒவ்வொரு வீடமைப்பு பகுதியிலும் திடல்கள் இருந்தன. ஆனால் இப்போது ஏராளமான திடல்கள் இல்லை.

இருப்பினும் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் விளையாட்டு துறையில் பின் தங்கி விடாமல் இருக்க மீபா மேற்கொண்டு வரும் முயற்சிகள் மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

மீபா தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு  பல போட்டிகளை நடத்தி வருகிறது. மீபாவின் பணி தொடர வேண்டும்.

கூட்டரசுப் பிரதேச தமிழ்ப் பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டியை இன்று சுங்கை பூலோ மெல்வூட் கிளப் திடலில் நடைபெறுகிறது.

இப் போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது டத்தோஸ்ரீ சரவணன் இதனைத் தெரிவித்தார்.

கோலாலம்பூர் இந்தியர் கால்பந்து சங்கத்தின் தலைவர் டத்தோ வீரமணி, துணைத் தலைவர் ராஜன், தொழிலதிபர் டத்தோ பத்மநாதன் உட்பட பலர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.

இன்றைய கால்பந்து போட்டியில் ஆண், பெண் என மொத்தம் 25 அணிகள் கலந்து கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset